பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

வாய் விட்டு சிரியுங்க..


வாய் விட்டு சிரியுங்க..

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்

3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.

4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்

5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு

6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர்.

சமுதாயத்தில் இந்த பத்து பேர்


சமுதாயத்தில் இந்த பத்து பேர்

பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.

முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்

பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது

ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்

அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்

நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்

டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்

மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்

வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி

மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 

வாய் விட்டு சிரியுங்க..


வாய் விட்டு சிரியுங்க..

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்

3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.

4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்

5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு

6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர். 

வாய் விட்டு சிரியுங்க..


வாய் விட்டு சிரியுங்க..

1.யூனியன் தலைவர்- நம் அலுவலகத்தில் நம் மேல் திணிக்கப்படும் வாலண்டரி ரிடைர்மெண்டை எதிர்க்கும் விதத்தில் நான் முதலில் இந்த ஸ்கீமில் வெளியேறி நிர்வாகத்திற்கு ஒரு பாடம்
கற்பிக்க உள்ளேன்.

2.நான் உங்கிட்டே சொல்லாதேன்னு சொன்ன ரகசியத்தை நீ சுஜாதாகிட்ட சொல்லிட்டதா சொன்னாளே
நான் சுஜாதா கிட்டே சொன்னதை உங்கிட்டேசொல்லாதேன்னு சொன்னேனே சொல்லிட்டாளா
சரி...சரி..நான் அவ கிட்ட உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்..அதனால நான் அவ சொன்னதை உன் கிட்ட சொன்னதை அவகிட்ட சொல்லிடாதே
(படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)

3.அந்த தமிழ் படம் பார்க்கிறவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன புத்தகம் தர்றாங்களாமே
அது..அந்த படத்தில வர தமிழ் பாட்டுக்களுக்கு தமிழ் அர்த்தம் போட்டிருக்காங்களாம்.

4.குழந்தை-(சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு)அம்மா...அம்மா..சீக்கிரம் வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்திலே கால் இருக்கு..கால் இருக்க வேண்டிய இடத்திலே தலை இருக்கு.

5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான்.

6.நீ காதலிக்கிற பெண்ணைப்பற்றி என் அபிப்பிராயம் எதுக்கு தம்பி கேட்கிறே?
அந்த பெண்ணைப்பற்றி எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும்...உங்களுக்கு இருபது வருஷமா தெரியுமே! 

இறைவன் இருக்கின்றானா?


இறைவன் இருக்கின்றானா?

ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றானா?

மூடநம்பிக்கை..என்று நாத்திகம் பேசும் பகுத்தறிவாளர்கள் கூட சிலசமயம் ..இறைவன் இருக்கின்றானா என தங்களுக்குள்ளாகவாவது கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

இறைவன் இருக்கின்றானா-அவன்
இருந்தால் எங்கே வாழ்கிறான்.
நான் ஆஸ்திகன் ஆனேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகன் ஆனேன்
அவன் பயப்படவில்லை என்றும்

தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

என்றும் பாடல் எழுதியிருக்கிறார்.பின் நாட்களில் அவரே ஆஸ்திகனாக மாறி கடவுள் இருக்கிறார் என்று நம்பியதுடன் ....அர்த்தமுள்ள இந்துமதம் தந்தார்.

இறை நம்பிக்கை இல்லா கலைஞரும் பல சமயங்களில் "என் ஜாதகம் அப்படி" என்று கூறியதுண்டு.

பகுத்தறிவாளரான அறிஞர் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றிருக்கிறார்.

பின் அதுவே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லப்பட்டது.

இதுபற்றி சத்குரு-ஜக்கி வாசுதேவ்விடம்" நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று ஒரு முறை கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில்

"கடவுள் என்று நீங்கள் எதைக்சொல்கிறீர்கள்?உங்களைச்சுற்றி படைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கே எல்லாம் படைப்பு நிகழ்கிறதோ ..அங்கல்லாம் தானே...அதோ அந்த மேகத்தில்,மணல் துகளில்,இந்த பூவில்,உங்களில்,என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத்தவிர வேறு எதை
நீங்கள் காணமுடியும்.?ஒவ்வொரு படைப்பிலும்..அதைப் படைத்தவன் இருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டால்...தினம்..தினம்..கணத்துக்கு கணம்..உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காணலாம்.." என்றார்.

அது சரி..இந்த பதிவு எழுதும் நீ இறைவன் இருக்கிறான்..என்று சொல்கிறாயா? என்கிறீர்களா?

அதற்கு என் பதில்'நான் எங்கே அப்படிச் சொன்னேன்? ஆனால் இருந்தால் நன்றாயிருக்கும்." 

வாய் விட்டு சிரியுங்க....


1.டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு ஜோசியரையும் அழைத்து வர்றாரே....ஏன்?

டாக்டர் ஆபரேஷன் செய்யும்போது..ஜோசியர் நோயாளியின் ஜாதகத்தில் மாற்றம் தெரிகிறதான்னு பார்த்துக் கிட்டு இருப்பார்.

2.கட்சி அலுவலகத்தை தலைவர் ஏ.சி. பண்ணச் சொல்லிட்டார்
ஏன்?
அவர் கிட்டே எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.

3.மருமகள்-(டாக்டரிடம்)டாக்டர் என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்கு?
டாக்டர்-பயப்படறார்போல ஒண்ணுமில்ல
மருமகள்-ஏன் டாக்டர்..எப்பவும் இப்படி நெகடிவ் ஆகவே பேசறீங்க?

4.என் பையன் போற போக்கைப் பார்த்தா கவலையாய் இருக்கு..மதிக்கவே மாட்டேன் என்கிறான்
உங்களையா?
அவன் மனைவியை.

5.போனவாரம்தான் உன் குழந்தைக்கு காதுகுத்தணும்னு லீவு கேட்டீங்க..இப்ப திரும்பவும் காது குத்தணும்னு லீவு கேட்கறீங்களே?
அப்போ..ஒரு காது தான் குத்தினோம்..இப்போ இன்னொரு காது குத்தறோம்.
எனக்கு எப்பவோ காது குத்தியாச்சு.

6.மகன்-(தந்தையிடம்)நீ காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிண்டே...என் காதலை மட்டும் எதிர்க்கிறியே ஏன்?
தந்தை-அதனால்தாண்டா எதிர்க்கிறேன்..

அனைவருக்கும் நன்றி...


அனைவருக்கும் நன்றி...

டிசம்பர் 15 முதல் 21 வரை நட்சத்திர பதிவராக 21 பதிவுகள் இட்டுள்ளேன்.,

கூடிய வரை..சில தகவல்களையும் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன்.

இந்த ஏழு நாட்களும்..கூடிய வரை அரசியல் கலக்காத பதிவுகளே..இட்டு வந்தேன்..

இந்த வாரம் என் வலைப்பக்கம் வந்து இடுகைகளை பார்வையிட்டவர்கள்,படித்தவர்கள்,படித்தபின் பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.என் வலைப்பக்கம் வராதவர்கள்,நேரம் கிடைக்கும் போது..வந்து படித்து..அவர்கள் கருத்தை தெரிவிக்க வேண்டிகிறேன்.

எனக்கு..இந்த சந்தர்ப்பத்தை அளித்த தமிழ்மணத்திற்கு நன்றி. 

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்


தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இந்த ஆண்டு முதல்..பொங்கல் திருநாளை..தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சாதாரண குடிமகனின் கவலை அதிகமானது.

அவன் கவலை..

ஏப்ரல் 14ம் நாள்..வழக்கம்போல தமிழ் புத்தாண்டு விடுமுறை என்ன ஆகும் என்பதே.,

அரசும்...இந்தநாளை விடுமுறையாக அறிவிக்கா விட்டால்..ஒரு சாரார், அதை ஒரு பிரச்னை ஆக்கிவிடுவார்களே ..என்ன செய்வது என எண்ணும் போது...

ஆபத்பாந்தவனாக..அம்பேத்கர் இருக்கிறார்.

ஏப்ரல் 14 ..அம்பேத்கார் பிறந்த நாள் ..விடுமுறை நாள்.

சாமான்யனின் கவலை தீர்ந்தது,

***** ***** ***** **** ****

சூரியனை மறைத்த கருமேகம் விலகியதால்...இப்போது சூரிய ஒளி பிரகாசமாய் உள்ளது.

திருமங்கலம் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்..அழகிரியையும்..அவர் பேச்சையும்..சன் செய்தியில் காட்டினார்கள்.

அதற்கு கொடுக்கப்பட்ட விலை..3 தினகரன் ஊழியர் உயிர்.

***** ***** ****

தூசு தட்டி..வாங்கப்பட்ட..ஒலி/ஒளி பரப்பப்பட்ட விஜய்காந்த் படங்களை சன் என்ன செய்யும்?

அண்ணாசாமிக்கு..இந்த விஷயத்தில் சந்தேகம் நீடிக்கிறதாம்.

**** ****** ***** *****

சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..

சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..

ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார். 

வாய் விட்டு சிரியுங்க..



1) ராகு காலம், எம கண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு எமகண்டத்தில கிளம்பி ஆஃபீஸ் போனியே என்ன ஆச்சு?
எனக்கு முன்னாலேயே அந்த மேனேஜர் எமன் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கு

2)மெகாசீரியலுக்கான கதை உங்கக் கிட்ட இருக்கா..எங்கே ஒன் லைன்ல சொல்லுங்க
ஒரு பணக்கார மருமகள்..அவளைக் கொடுமைப் படுத்தற அத்தை..மௌனியாய் கணவன்...
ஆகா..அற்புதம் ..பிடியுங்க அட்வான்சை

3)அவருக்குப் பின்னாலேயே சொம்பைத் தூக்கிக்கிட்டு ஒருத்தர் போறாரே எதற்காக..
இணையதளத்தில ஏதோ சர்ச்சையாம்..நாட்டாமைப் பண்ணப் போறார் முதல்லப் போறவர்..பின்னால அவர் எச்சலைத் துப்ப சொம்போட போறார் உதவியாளர்

4)இந்த சமயத்தில நீ வந்தது என் மனைவிக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
எப்படிச் சொல்ற
அவ போட்ட காஃபியை உனக்குக் குடிக்கக் கொடுக்கிறாளே

5)தொண்டர் 1- தலைவருக்கு வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன்
தொண்டர்2- எப்படிச் சொல்ற
தொண்டர்1- மக்கள் கிட்ட இரண்டு விரல்களைக் காட்டும் போது திருப்பிக் காட்டறாரே!

6)பல் மருத்துவர்- உங்க மொத்தப் பல்லையும் இன்னிக்கு பிடுங்கியாகணும்
நோயாளி- ரொம்ப வலிக்குமே டாக்டர்
பல் மருத்துவர்- பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கங்க

7)பதிவர் - எனக்கு இதுவரைக்கும் தலைவலின்னு வந்ததே இல்லை
நண்பர்-உங்களாலே மத்தவங்களுக்குத்தானே தலைவலி வரும்

tvrk thanks

வாய் விட்டு சிரிங்க...!!






1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?

7.என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

8..நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

9.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

10.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

11.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

12.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே

ஞாயிறு, 11 நவம்பர், 2012

கவுண்டமணி Vs சந்தானம் !



திருவாளர் கவுண்டமணி முதுமை காரணமாக திரையில் இருந்து விலகி இருந்தாலும், அவரில்லாத இடைவெளியை இட்டு நிரப்பி, வளர்ந்து வரும் ஒருவர் , கவுண்டரை கண்டு பிறந்த நாளுக்கு ஆசி வாங்க அவரைப் போலவே 'நக்கல் எகத்தாள காமடி' செய்துவரும் நடிகர் அதாவது சந்தானம் சந்திக்கிறார்

புதன், 7 நவம்பர், 2012

ரசித்த ஜோக்குகள்


ரசித்த ஜோக்குகள்

காதால் கேட்ட ஜோக்குகள் :
1 ) (நன்றி எனது அண்ணன்)
ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க ?
மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்டெக்ஸ்' போட்டு இருந்தா இன்னும்
வசதியா இருக்கும்னு சொல்லுறாரு ..
ஒருவர் : அதிலென்ன தப்பு..?
மற்றவர் : யோவ், இது 'டிக்ஷனரி'
---------------------------------------------------------------------------------------------


2) லைப்ரரியியனிடம், சர்தார்ஜி :
என்ன புஸ்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நெறைய கதா
பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே ?

லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற
டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா ?
--------------------------------------------------------------------------------------
நெட்டில் நான் ரசித்த சில ஜோக்குகளை இங்கு தந்துள்ளேன்..

3) கையிலே காசு இல்லேன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க.. 'கடன்' வாங்கலாமே ?
--------------------------------------------------------------------------
4) காருல ரெண்டு பேரு போறாங்க.. அப்ப
டிரைவர் : கொஞ்சம் தலைய வெளியே நீட்டி சைடு இன்டிகேடர்
எரியுதான்னு பாருங்க..
சர்தார்ஜி : எரியுது.. எரியல.. எரியுது. எரியல.. எரியுது.. எரியல..
எரியுது.. எரியல.. எரியுது... எரியல..
------------------------------------------------------------------------------------------
இதேபோல வரும் வேறு ஒரு ஜோக்கு.. (கேள்விப் பட்டது)
6) பார்க்கில் ஒரு சர்தார்ஜி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அவரிடம்
ஒருவர் : ஆர் யூ ரிலாக்சிங் ?
சர்தார்ஜி : நோ.. ஐ ஆம் கபீர்சிங்
-------------------------------------------------------------------------------------
7
-----------------------------------------------
எனக்கு கூட ஜோக்கு எழுதிச் சொல்லவரும்.... நா யோசிச்சு (!) கண்டுபுடிச்ச ஜோக்கு
8 )
ஒருவர் : என்னது அந்தாளு செந்தில் கணக்கா அடி வாங்குறாரு..?
மற்றவர் : ஆளில்லா, ரயில்வே லெவல் கிராசிங்ல ஆக்சிடண்ட
தடுக்குறதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடலாம்னு
யோசனை சொன்னாரு..
முதலாமவர் : நல்ல விஷயம்தானே அதுக்கு ஏன் அடிக்குறாங்க ?
மற்றவர் : அவரு சொன்ன ஸ்பீட் பிரேக்கர்... ட்ராக்குல வர்ர
ரயிலுக்காம்..

டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?

செவ்வாய், 6 நவம்பர், 2012

கோகுலின் நகைச்சுவை


காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!
******
ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது…!
சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!
ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு…!
******
ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்’னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?
சோமு : வேறென்ன…! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!
******
சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?
ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா….
******
நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
******
ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?
சோமு : இல்லை கிடைக்கலையே!
ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!
******
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?
ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.
******
இன்றைய மெகா ஜோக்:
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
******

ப்ரியத்துடன்,
கோகுல்
Thanks:Piravakam@googlegroups.com

படகில் நீங்கள்


படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?”
“சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.”
*************
ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
“என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!” என்று பதட்டத்துடன் சொன்னார்.
மானேஜர்: “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”
வந்தவர்: “ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!”

கோகுலின் நகைச்சுவை


கோகுலின் நகைச்சுவை

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. ..
எப்படி ?
கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. .
******
எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ?
அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம்
******
ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா.
ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண்.
முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்
******
ஒரு வக்கீலிடம் நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா?-னு கேட்டான் ஒருத்தன்.
நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன?-னு கேட்டார் வக்கீல்.
******
நர்ஸ் : டாக்டர், எதுக்கும் இவருக்கு தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
டாக்டர் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?
******
எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க.
எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும்.
*******
பெண்ணின் அப்பா : பெண்ணைப் பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க.
மாப்பிள்ளை வீட்டார் : ஏன் அவசரப்படறீங்க?
பெண்ணின் அப்பா : தரகர், அடுத்த பார்ட்டியோட வெளியில காத்துக்கிட்டு இருக்கார்.
******
நடிகர் : என்னது, இந்த சீன்ல, நூறு அடி உயரத்திலிருந்து, நீச்சல் குளத்தில் குதிக்கணுமா? எனக்கு நீச்சல் தெரியாதே!
டைரக்டர் : பயப்படாதீங்க, அதுல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!
******
இதுதாங்க இன்னிக்கு மெகா ஜோக்:
நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.
டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..
நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?

ப்ரியத்துடன்,
கோகுல்
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:
Piravakam@googlegroups.com 

கோகுலின் நகைச்சுவை


உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ?
வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான்.
******
தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?
ஏன் இப்ப என்னாச்சு ?
கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.
******
கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா, தங்கச்சிப் பாப்பா வேண்டாமாடா கண்ணா?
எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்
******
என் பையன் மத்தப் பசங்களை மாதிரி ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி பாட்டெல்லாம் பாட மாட்டான், வெறும் பக்திப் பாட்டுதான் பாடுவான்.
ஆப்படியா ?
ஆமாம் ஆண்டாளு என் ஆண்டாளு .. .. திருப்பதி எழுமலை வெங்கடேசா., யப்பா யப்பா ஐயப்பா இந்த மாதிரிதான் பாடுவான்.
******
எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?
அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.
******
“இது நல்லாயில்லைங்க.”
“என்னங்க நல்லாயில்ல?”
“உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை”
******
இது பயங்கரமான திகில் படமா, எப்படிச் சொல்றே ?
‘விக்’ முடிகூட சிலுத்துக்குதே.
******
இன்றைய மெகா ஜோக்:
ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.
தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.
அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

ப்ரியத்துடன்,
கோகுல்
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:Piravakam@googlegroups.com

ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர்…


ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர்…

கடவுள் ரொம்ப ஓர வஞ்சனை பண்ணிட்டாருடா..!
-
என்னடா சொல்றே?
-
ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்…!
-
>எம்.அசோக்ராஜா
-
———————————————-
-
மன்னா…எதிரி மன்னர் உங்களைத் திட்டி ஓலை அனுப்பி இருக்கிறார்?
-
இதைக்குறைந்தது 10 முறையாவது நீர் படிச்சு சந்தோஷப்பட்டு இருப்பீரே…!
-
>எம்.அசோக்ராஜா
-
——————————————–
-
டீசல் விலை ஏறினதுக்காக உன்னோட சைக்கிளை ஏண்டா வித்துட்டே?
-
எல்லோரும் ஓசி கேட்பாங்களே…!
-
>அ.ராஜா ரஹ்மான்
-
———————————————
-
பாடத்தைக் கவனிக்காமல் இருந்ததால்தான் உன்னை நான் அடிச்சேன்.
ஞாபக்மிருக்கா?
-
அதை நான் ‘அடி’யோட மறந்துட்டேன் ,டீச்சர்.
-
>பி.கவிதா
-
———————————————-
நன்றி: சுட்டி விகடன்

சனி, 3 நவம்பர், 2012

வேக வேகமா..


வேக வேகமா..

பாய்ச்சல்
வேக வேகமா, உணவைக்கூட வேகாம வேகாம சாப்பிட்டு எங்கே ஓடுறோம்...
எங்கோ ஓடுறோம்..
எல்லோரும ஓடுறாங்க..
நாமும் ஓடுவோம்...

நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..
அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்.

அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்பவர்கள் இருந்தார்கள். ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்பவர்களை அட்டாவதாணி என்றும் ஒரே நேரத்தில் நூறு செயல்கள் செய்தவர்களை சதாவதாணி என்றும் 
அழைத்தார்கள்.


உங்கள் வேலையை வேகமாக முடிக்க ஒரே வழி
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வது

என்றொரு பொன்மொழி உண்டு. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கு சிந்திக்கத்தகதாகவுள்ளது.
என்னுடைய அனுபவத்தில் ஒருவேலையை விரைவாக முடிக்க ஒருநேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்கிறேன். 


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் பாய்ச்சல் என்றொரு கதை நினைவுக்கு வருகிறது...

ரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும்
விறகுவெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்துபோனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?' என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?'
கயிறு சொன்னது :-

'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை'



தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"வேக வேகமா.."

Saturday, September 1, 2012

மக்கு மனுசன்.


மக்கு மனுசன்
பயன்படுத்துவதெல்லாம் மக்காப் பொருள்கள்
அதனால் மண்ணே மக்கா போச்சு
மக்கா யோசிங்க...
நாமெல்லாம் மக்கிப் போகலாம்
இந்த மண்ணு மக்காமப் போகலாமா..?

சொல்லும் பொருளும்

மக்கு மனுசன் - முட்டாள் மனிதன்
மக்கா பொருள்கள் - மக்காத பொருள்கள்
மண்ணே மக்காப் போச்சு - மண் மலடாப் போச்சு
மக்கிப் போகலாம் - மறைந்து மண்ணில் கலந்துபோகலாம்
மக்காமப் போகலாமா - மக்கித்தான் போகனும்

தொடர்புடைய இடுகைகள்

                                                                                   அதனால் மரங்களை வெட்டாதீர்கள்
                                                                                நாளைய குடிநீர்
மேலும் சுவாசிக்க"மக்கு மனுசன்."

Monday, March 26, 2012

எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!



எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..

“கால தா மதம்

எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!

தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!"

Saturday, February 18, 2012

முறைமாமன் சீரு.


தமிழ் மரபுகளையெல்லாம் மறந்துவிட்ட இன்றைய தலைமுறையினரிடையேயும் மரபுகளை மறக்காத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதோ தமிழ் மண்வாசனையோடு ஒருகவிதை..
இதை எழுதியவர் என் மாணவர் திரு.ச.கேசவன் என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்





முக்கனிகள் சேர்த்தெடுத்து
முறைமாமாமன் சீரெடுத்து
முச்சந்தியில் மக்களெல்லாம்
மூக்கின் மேல் விரலைவைக்க
மேளம் கொட்டி வாராண்டி!

பச்ச ஓலையில
உன்னைப் பூட்டப் போறாண்டி!

பித்தளையில் பாத்திரங்கள்
செப்புதனில் நீர்க்குடங்கள்
தங்கத்துல நகைசெஞ்சு
வாராண்டி!

உன்னத் தங்கத்துல செஞ்ச
வைரமுன்னு சொல்வாண்டி!

பலவனத்துப் பூவினங்கள்
ஊர்மயங்கும் பல நிறங்கள்
மாலையாகக் கோர்த்தெடுத்து
வாரண்டி!

அந்த மாலையில
உன்னக் கட்டப் போறாண்டி!

மொட்டு ஒன்னு மலர்ந்திருச்சி
நாணம் வந்து செவந்திடுச்சி
வண்டு போல மாமன் அவன் வாராண்டி!

உந்தன் நாணத்தை
வெல பேசப் போறாண்டி!

ஊரடக்கிப் பேசியவ
ஊரச்சுத்தித் திரிஞ்சபுள்ள
வாயடச்சி நிற்கிறத
பாருங்கடி!

இப்ப வட்டியும்
முதலுமா வாங்கிக்கடி!

மாமன் அவன் வாங்கிவந்த
பட்டுடுத்தி நடக்கயிலே
ஊருசனம் கண்ணுவெக்கும்
வாருங்கடி..
வந்து இவளுக்குக் கருநிலா
பொட்டெடுத்து வையுங்கடி!

தீட்டு வந்து சேருமின்னு
நல்லெண்ண தலைக்குவெச்சு
நட்டாத்தில் குளிச்சுப்புட்டு
வாராண்டி!

நல்லா கறிசமைச்சு
ஆக்கிப்போட வாருங்கடி..

பெண்ணாகப் பொறந்தவளே
கல்லாக இருந்த உன்ன
செலையாக செதுக்க மாமன்
வாராண்டி!

உன் சிரிப்பெடுத்து
தன்மனசுல கோர்க்கப் போறாண்டி!

ச.கேசவன்
இளம்கலை இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

மேலும் சுவாசிக்க"முறைமாமன் சீரு."

Thursday, February 16, 2012

எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி!

பொருளற்ற வாழ்க்கை வாழும்
பொருளற்றவரின் வாழ்க்கையைக்கூட
பொருளற்ற வார்த்தைகளால்
பொருள் பொதிந்த வாழ்க்கையாக்கிக் காட்டும்
பல்கலைக்கழமே குழந்தை!

ங்ங்ககா
அஅஆ
உஉஊ
த்த்த்ததா
ம்மா
ப்பாபு

என்ன மொழி இது!!
ஒவ்வொரும் அவரவர் அறிவுக்கு எட்டியவரை
 மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள்!

அம்மான்னு சொல்லுதுங்கறாங்க அம்மா
அப்பா சொல்லுதுன்றார் அப்பா
இல்லை தாத்தான்னுதான் சொல்லுதுங்கறார் தாத்தா
இல்லை மாமா சொல்லுதுங்கறார் மாமா.

இப்படி ஆளுக்கொரு ஆசைகளை
மொழிபெயர்த்துக்கொள்கிறார்கள்!

எத்தனையோ மொழிமாற்றி மென்பொருள்கள் 
வந்து என்ன பயன்?

இந்த மழலை மொழியை மொழிபெயர்பதல்லவா
மெய்யான தொழில்நுட்பம்!

நீ - நான் - நாம் 
உயர்திணை - அஃறிணை என
எந்த இலக்கண மரபுகளுமே கிடையாது மழலை உலகில்!

இயற்கையின் படைப்பில் உயர்வென்ன தாழ்வென்ன 
என்ற உண்மையைத் தான் 
தன்மொழியில் சொல்கிறதோ மழலை!

காற்றோடு
தீயோடு
பறவையோடு
விலங்கோடு
என எதோடு பேசினாலும் தன் மொழியிலேயே பேசுகிறது மழலை!

மழலை மொழி பொருளற்றது
என நம் கல்வியறிவு புறம்தள்ளினாலும்
இனிமையானது என உள்மனது சண்டைக்குவருகிறது!

கடவுள் இல்லையென்றே நீண்ட காலமாகச் சொல்லிவந்த
மனது இப்போதெல்லாம் சொல்கிறது

மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று..

ஒப்பீடு..
குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(திருக்குறள் 66)

தொடர்புடைய இடுகை

மேலும் சுவாசிக்க"எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி!"

Tuesday, February 14, 2012

உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!

வாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு!
“களவும் கற்று மற”
என்று களவியலும் - கற்பியலும் வகுத்து
களவு என்னும் காதலுக்கும் ஒரு காலஅளவுண்டு
களவுக் காதல் சில நாட்களில் திருமணம் செய்துகொண்டு கற்புக்காதலாக மாறவேண்டும் என்று சொன்னவர்களல்லவா நம் முன்னோர்.

நான் காதலர் தினம் கொண்டாடுவதைவிட
காதலைத் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அதனால் தான் எனது இடுகைகளில் 60 விழுக்காடு காதலைச் சொல்லியிருக்கிறேன்..

காதல் குறித்த எனது சில புரிதல்கள்....


எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்!

காதலர்கள் மாறலாம் 
காதல் மாறுவதில்லை!

மண்ணில் உயிர்களைப் புதுப்பிக்கும் 
வேதியியல் மாற்றமே காதல்!

உணர்வுக்கும் அறிவுக்கும் 
இடையே நடக்கும் 
போராட்டமே காதல்!

அறிவின் அனுமதியோடு 
வரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்!
உணர்ச்சியின் வேகத்தில் குதிக்கும்
காதலுக்கு வாழ்நாள் குறைவுதான்!

பணம் - காதல் என்னும்
 இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்!

இவ்விரண்டும் சிலர் பின்னால் மட்டுமே ஓடுகின்றன!

காதலிக்கும்போது....

ஐம்புலன்களும் காதலிப்பவர்களுக்கெதிராய் போர்க்கொடி உயர்த்தும்.

 நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் 
என்று உடல் கண்ணிடம் முறையிடும்!

நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் 
என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!

சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க 
நீங்க செய்த தவறுக்கு 
என்னை நானே அடித்துக்கொள்கிறேன் 
என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!

கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை 
என்று நினைத்துவிட்டீர்களா? 
என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!

என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று 
உடலிடம் உயிர் சொல்லும்!

நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.

இது வலியா? சுகமா?

காதலிக்காமலும் சாகக்கூடாது
காதலுக்காகவும் சாகக்கூடாது!

வாழ்ந்துகாட்டனும் அதுதான் காதல்!

தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!"

Tuesday, January 31, 2012

உயிரோடு செத்தவர்கள்!



உயிர் இருக்கிறது
உணர்ச்சி இல்லை!
உதடு இருக்கிறது
சிரிப்பு இல்லை!

என்ன இது?
இக்கால இயந்திரமா?
உற்றுப் பார்க்கிறேன்..

அட!
இவர்கள் மனிதர்கள்தான்!

நீங்களெல்லாம்..
உயிரோடு செத்துவிட்டீர்களா?
இல்லை
செத்தபின்னும் உயிர்வாழ்கிறீர்களா?
என்று கேட்கிறேன்..

நாணயங்களின் ஓசையில் என்
நா நயங்களின் ஓசை
இவர்களுக்குக் கேட்கவில்லை!

மீண்டும் கேட்கிறேன்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு சிரிப்பில்தானே தெரியும்..?

எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..

ஒன்றை இழந்தால்தானே
இன்னொன்றைப் பெறமுடியும்!

நாங்கள் சிரிப்பை விதைத்து
பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..


மேலும் சுவாசிக்க"உயிரோடு செத்தவர்கள்!"

Tuesday, January 10, 2012

தற்கொலை செய்த அலை..




கடல் அலை வந்து கரையில் கற்கள் மீது மோதி நுரை கக்கிச் செல்லும் போது என் மனது சொல்கிறது...





காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?

என்று..

கடலையும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் என் மனது கால இயந்திரமேறி சங்ககாலத்துக்குச் சென்றுவிடுகிறது.
கல்பொரு சிறுநுரையார் என்றொரு புலவர் சங்ககாலத்தில் இருந்தாரே என்று.. 
மேலும் சுவாசிக்க"தற்கொலை செய்த அலை.."

Friday, December 9, 2011

மருந்தில்லா நோய்களுக்கான மருந்து!

காலந்தோறும்...
நோய்களின் பெயர்கள் தான் மாறுகின்றன!
நோய்கள் மாறுவதில்லை!
மருந்துகளின் பெயர்கள்தான் மாறுகின்றன!
மருந்துகள் மாறுவதில்லை!

கண், காது, மூக்கு என ஒவ்வொரு உறுப்புகளையும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மருத்துவத் துறைகள் வந்துவிட்டன. ஆனாலும் இன்றுவரை எந்த மருத்துவராலும் தீர்க்கப்படாத நோய்கள் பல! அவற்றுள்..

“பிறவி, பசி காதல்” என்னும் மூன்று நோய்களும் குறிப்பிடத்தக்கன.

உயிரின் வேட்கை - பிறவி!
உடலின் வேட்கை - பசி!
உள்ளத்தின் வேட்கை காதல்!

பிறவிநோய்

பிறவிநோய் தீர்ப்பவர் யார்?
கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தேடுவதைவிட. அந்தக் கடவுளே நாம் தான் என்தை உணர்வது சிறந்தது.

அந்தந்த மணித்துளிகளில் வாழ்தல்!
சுயநலம் துறத்தல்
பொதுநலம் விரும்புதல் 
ஆகியன நம் மனதில் தோன்றினால் இப்பிறவி ஒரு நோயாகவே தெரியாது. அதற்குப் பிறகும் இப்பிறவி ஒரு நோயாகத் தோன்றினால்...

“கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும் - நிறைய மனநிறைவையும்”

மூன்று வேளையும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.

பசி

நாம் பல நேரங்களில் வயிற்று மனிதர்களாகவே வாழ்கிறோம். அதனால் நமக்குக் கழுத்துக்குக் கீழே வயிறு மட்டும் தான் பலநேரங்களில் இருக்கிறது. அதனால் பசி ஒரு பெரிய நோயாகத் தான் உள்ளது. வயிறு நிறைய உண்டாலும் மீண்டும் பசிக்கிறது. இந்த நோய் தீர என்ன வழி?

நானறிந்தவரை...

“அளவாக உண்டாலும் அன்போடு வழங்கப்படும் உணவுக்கு பசி என்னும் இக்கொடிய நோயை நீக்கும் ஆற்றல் உண்டு” என்று நம்புகிறேன்.

காதல்

பண்பாட்டுக் கலப்பாலும், திரைப்படங்களாலும் இன்றைய சூழலில் காதல் என்ற சொல்லின் பொருள் நிறையவே மாறியிருக்கிறது.

உள்ளம் சார்ந்த காதல்
உடல் சார்ந்த தேடலாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகிறது.

உணவில் உப்பு போல..
காதலின் ஒரு கூறுதான் உடல்..

உணவில் உப்பின் அளவு அதிகமானால்..??

மலரினும் மெலிதல்லவா காமம்!!

காதல் நோய்கான மருந்து...

நிறைய புரிதல்
அவ்வப்போது விட்டுக்கொடுத்தல்
சின்னச் சின்னச் சண்டைகள்...

இம்மருந்துகளை காலை, மாலை, இரவு என உட்கொள்வதால் இந்நோய் தீரும்.

தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"மருந்தில்லா நோய்களுக்கான மருந்து!"

Thursday, December 8, 2011

துளிப்பாக்கள்


வெற்றிக்குத் தேவையான 
எரிபொருள்

“தன்னம்பிக்கை”


சிலருக்கு நோய் 
பலருக்கு மருந்து

“பசி”


அழகின் 
முற்றுப்புள்ளி

“நிலவு”


உயர்ந்தவர்களின் செருப்பு
தாழ்ந்தவர்களின் மணிமகுடம்

“புகழ்”

தவறுகளைக்கூட
தவறின்றிச் செய்யத்தெரியாத அப்பாவிகள்

“சிறைக்கைதிகள்“

பல வண்ணங்களும்
பல நிறங்களும் கொண்ட ஒரே பூ

“சிரிப்பூ”


அறிவின் அடையாளம்
அறியாமையின் குறியீடு

“அமைதி”


மனித அறிவின் எச்சம்
மனித அழிவின் உச்சம்

“அறிவியல்”


தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"துளிப்பாக்கள்"

Saturday, December 3, 2011

ஏழாம்அறிவு உள்ளவரா நீங்கள்?




தாயின் கருவறையைவிட்டு
வெளியே வந்தே
வளர்க்கவேண்டியதாகவுள்ளது
ஏழாம் அறிவு!

தந்தை தேடித்தந்தாலும்
அடிக்கடி
தொலைந்துபோகிறது
ஏழாம் அறிவு!

எப்படிப் பெறுவது என்று
ஆசிரியர் கற்றுத்தந்தாலும்
புரிவதே இல்லை
ஏழாம் அறிவு!

எத்தனை புத்தகங்கள்
எடுத்துச் சொன்னாலும்
மறந்துபோகிறது
ஏழாம் அறிவு!

ஏழாம் அறிவு
இல்லாதவர்களுக்கு
ஆறு அறிவு இருந்தாலும்
மதிப்பே இருப்பதில்லை!

ஏழாம் அறிவு மட்டும்
இருந்துவிட்டால்
அவர்களைச் சுற்றி....

கைகட்ட
வாய் பொத்த
ஆமாம் ஆமாம்
 என்று தலையாட்ட
ஆயிரம்ஆயிரம்
வயிற்று மனிதர்கள்!!

ஆம்
இந்த ஏழாம் அறிவின்
இன்னொரு பெயர்
“பணம்“

இதைப்
புரிந்துகொள்வதிலும்
புரியவைப்பதிலுமே
வாழ்க்கை
தொலைந்துபோகிறது!


தொடர்புடைய இடுகை


மூன்று வகை மனிதர்கள்
மேலும் சுவாசிக்க"ஏழாம்அறிவு உள்ளவரா நீங்கள்?"

Friday, December 2, 2011

கனவு வியாபாரிகள்!

கடவுள் நம்பிக்கைகளை
உண்டியலில் 
சேர்க்கத் தெரிந்த
மதவாதிகள்!

தனிமனித ஆசைகளை
நடித்துக்காட்டி
நடந்ததாக நம்பச் செய்யும்
திரைத்துறையினர்!

சிவப்புதான் அழகின் நிறம்
என்று
மூளைச் சலவை செய்யும்
விளம்பரக்காரர்கள்!

எல்லாம் மக்களுக்காக
என்று சொல்லி ஆட்சிக்குவந்து
தன் மக்களுக்காகவே சேமிக்கும்
அரசியல்வாதிகள்!

பிள்ளைகளைப் பற்றிய
பெற்றோரின் கனவுகளைக் 
காசாக்கத் தெரிந்த
தனியார் கல்வி நிறுவனங்கள்!

கட்டிப்போட்டு 
சோம்பேறியாக்கி
விளையாட்டுக்காட்டியே காசுபறிக்கும்
தொலைக்காட்சிகள்!

ஆளும்கட்சிக்கு
ஆமாம் சாமி போட்டு
பக்கம்பக்கமாக பொய்யை விற்கும்
நாளிதழ்கள்!

பலவீனத்தை வைத்தே 
பலன் சொல்லிப்
பணம் பார்க்கும் 
சோதிடக்காரர்கள்!

என 
நம்மைச் சுற்றிலும்
கனவு வியாபாரிகள்!!

நாமும்கூட
சிலநேரங்களில் 
கனவுவியாபாரிகளாகவே
வாழ்ந்துதொலைக்கிறோம்!

தனிமனிதக் கனவுகளை
வியாபாரம் செய்வதும்
கற்பை வியாபாரம்
செய்வதும் வெவ்வேறா??

என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை!!
மேலும் சுவாசிக்க"கனவு வியாபாரிகள்!"

Wednesday, November 30, 2011

காற்று - ஆணா? பெண்ணா?


எங்கும் நிறைந்தது கடவுள் என்றால்..

என் மனம் காற்றின் இன்னொரு பெயர்தான் கடவுளா? 
என்று கேட்கிறது.

இந்த உலகில் ஆண், பெண் என்றபாகுபாடு உயர்திணை மட்டுமின்றி, அஃறிணையிலும் உண்டு...

கடலில் கூட அதன் சீ்ற்றத்தை வைத்து ஆண், பெண் எனப் பாகுபாடு செய்வார்கள்.

நிலவைப் பெண் என்றும் பரிதியை ஆண் என்றும் கவிஞர்கள் பாடுவார்கள்.

தாவரங்களில் கூட ஆண் பெண் பாகுபாடு செய்வதுண்டு..

இவற்றையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் மனதில் ஒரு கேள்வி தோன்றியது. 

காற்று ஆணா? பெண்ணா? என்று..

தென்றல், வாடை, கொண்டல், கோடை என்று இலக்கியங்களும் 

அறிவியலும் காற்றைப் பலவாறு பாகுபாடு செய்திருக்கின்றன.

இருந்தாலும் இந்த சராசரி சிந்தனைகளைக் கடந்து காற்று எனக்கு 

பெண்ணாகவும், ஆணாகவும் தெரிகிறது..


மரங்களின் 
இலைகளாய்
சலசலக்கும்போது...

மழலையின்
தலைமுடி
கோதும்போது..

மலரின் வாசத்தை
ஊரெல்லாம் 
சொல்லும்போது...

குழலின்
வழியே
இசையாகும்போது...

பறவைகள்
மொழியில்
ஒலியாகும்போது...

!காற்று பெண்ணாகிறது!


பேரலையாய் 
கரையை 
மிரட்டும்போது...

பெருங்காற்றாய்
மக்களைச் 
சிதைக்கும்போது...

வாடைக்காற்றாய்
மக்களை 
வதைக்கும்போது...

பறையின் 
வழியே
இசையாகும்போது..

விலங்குகளின்
மொழியில் 
ஒலியாகும்போது..

இடித்தாலும்
மேகமாய்
மழைபொழியும்போது..

!காற்று ஆணாகிறது!

தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"காற்று - ஆணா? பெண்ணா?"

Tuesday, November 29, 2011

உயிரற்றுப் போன உயிர்கள்!

சில 
நடத்துநர்களின் பார்வையில்
மனிதர்கள் யாவரும்
பயணச்சீட்டுகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஓட்டுநர்களின் பார்வையில்
விபத்துக்குள்ளாகும் உயிர்கள்
தம் சாலைவிதி மீறலின்
ஒறுத்தல் கட்டணமாகவே புலப்படுகின்றனர்!

சில 
அரசியல்வாதிகளின் பார்வையில்
வாக்காளர்கள் யாவரும்
சிந்திக்காமல் ஓட்டுப்போடும் 
இயந்திரங்களாகவே காட்சியளிக்கின்றனர்!

சில 
மருத்துவர்களின் பார்வையில் 
நோயாளிகள் யாவரும் 
தம் மருத்துவமனைக்கு நிதியுதவி செய்யவந்த 
வங்கிகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஆசிரியர்களின் பார்வையில்
மாணவர்கள் யாவரும்
தேர்ச்சி விழுக்காடுகளாகவே 
பதிவுசெய்யப்படுகிறார்கள்!

சில 
மாணவர்களின் பார்வையில்
ஆசிரியர்கள் யாவரும்
பாடம் கற்பிக்கும்
 இயந்திரங்களாகவே உணரப்படுகின்றனர்!

சில 
செய்திவாசிப்பாளரின் பார்வையில்
பலியான உயிர்கள் 
எதுகை மோனையோடு சொல்லப்படும் 
எண்ணிக்கையாகவே உள்ளனர்!

மனிதர்கள் பார்வையில்..
உயிர் உள்ளவையெல்லாம்
உயிரற்றுப் போகின்றன

உயிரற்ற பணம் மட்டும்  
உயிராக மதிக்கப்படுகிறது!


தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"உயிரற்றுப் போன உயிர்கள்!"

Wednesday, November 9, 2011

மூன்று வகை மனிதர்கள்

நான் என் வாழ்வில் கண்ட மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தி உணர்ந்திருக்கிறேன்..

இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை மனிதனாகவே இருந்திருக்கிறேன்..
இருக்க முயற்சித்து வருகிறேன்..
இதோ என் வகைப்பாடு..







சிந்திப்போர் 
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!

அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!

சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!

பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!

மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!

கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!

வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!

காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!

வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!


வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!

துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!

பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!

தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!

அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!

என்ன நண்பர்களே என் வகைப்பாடு பிடித்திருக்கிறதா..

இதில் நீங்க எந்த வகை மனிதராக இருக்கிறீர்கள் என்று தன்மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்..

தொடர்புடைய இடுகைகள்


மேலும் சுவாசிக்க"மூன்று வகை மனிதர்கள்"