பக்கங்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

நகைக்க


Headlines by FeedBurner

ஒட்டகமும் புலிகேசியும்


ஒட்டகமும் புலிகேசியும்

Posted on 6:07 PM by நீச்சல்காரன்


போர்க்களத்தில் புட்பால்(கால்பந்து) ஆடிக்கொண்டிருந்த புலிகேசி அரசரிடம் ஒற்றன் ஒருவன் ஒரு ஓலையைத் தந்து, ஓடிவந்த களைப்பில் மயங்கி விழுந்தான். பசி மயக்கத்தில் அந்த ஓலையை உண்ணத் தொடங்கியது ஓர் ஒட்டகம். அந்த ஒட்டகத்தின் வாயிலிருந்து பிடிங்கி ஓலையைப் படித்துப்பார்த்தார் புலிகேசி. ஏதோ எதிரி நாட்டுப் பெரும் படை ஒன்று இந்நாட்டுப் போர்க்களம் நோக்கி வருவதாகச் செய்தி இருந்தது. அதை அறிந்து புள் பிடுங்க, பந்துபொறுக்கிப் போட, விசில் அடிக்க வந்த படை வீரர்களும், போஸ்டர் ஓட்ட, கொடிபிடிக்க, காலில் விழ கூட்டிவந்த அமைச்சர்களும், மொக்கைபோடவும், சடை போடவும் வந்த அரசிமார்களும், அரசருடன் சேர்ந்து கிலி கண்டனர். யாவரும் செய்வதறியா திகைத்து நின்றனர். தொடங்கியது மன்னரின் உரையாடல்....