பக்கங்கள்

புதன், 24 அக்டோபர், 2012

கலாய்த்தலும் காமடியும்..!


கலாய்த்தலும் காமடியும்..!

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்

கமலா : என்னடி, எப்ப பார்த்தாலும் ஒரு கழுதை உன் பின்னாடியே வந்துட்டு இருக்கு?

விமலா :  என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டரை இதுகிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே வருது
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்

இக்பால் செல்வன் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இக்பால் செல்வன்: நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

தருமி : என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!

அறிஞர் இக்பால் செல்வன் ஒருநாள் லிப்டில் வைத்து.
என்ன சார், இரயில் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?"

"இல்லைங்க, upper Berth குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு"

"Lower Birth" காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?""

இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா,

கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?"
மலேசியா சதுப்புநிலத்தீவில் அறிஞர் கோவி கண்ணன்.

"இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா"

"அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?"

"சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?"

"நான் உட்கார்ந்துட்டேன்னா "டேபிளை" எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?"

10/16/12

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..!


கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே? 
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!
மனைவி : " என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்"
கணவன் : " அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே….
எத்தனை மாசம் ?"
மனைவி : " அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க"

மகேஷ் : " பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?"
தினேஷ் : "பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்"

பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.
பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?
பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...!
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.
கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்..

மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
தந்தை: ?!?!?!





9/3/12

முகமூடி மொக்கை!

குமார்:  அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா! 
ராமன்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

பாலா : ஏண்டா உன்ன பிரின்சிபல் அடிச்சுட்டு போறாரு
ராம் : பிரின்சிபலோட நாய கானோம்னு பேப்பர்ல விளம்பரம் போடச்சொன்னாரு
பாலா: அதுக்கு?
ராம்: நான் பிரின்சிபல் நாய கானோம்னு போட்டுட்டன்..
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'
'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!
மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்..

அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'
'ஏன்?'
'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !' 

"போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...
வீட்டுக்காரர்: ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தையும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்."
நோயாளி: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
நர்ஸ்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
நோயாளி : பெயிலியர் ஆச்சுன்னா...?
நர்ஸ்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!

"கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ..!!

தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'
'என்னவாம்?'
'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !
பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு
குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?
'தலைவர் பழசை மறக்காதவர்'

"மனைவி: என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?
கணவன்: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்..

"மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?
கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?
மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...


8/4/12

டேய் மச்சான், அங்க பாருடா!!

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக் குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், அங்க பாருடா!!

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: : நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
ஹலோ, அண்ணாமலை இருக்காரா?" 
"ஐய்யா குளிக்கறாரு" 
"சாரிங்க, ராங் நம்பர்"

பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். 
தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்" 
"பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"

காதலன்: இன்னிக்கு என்ன ரொம்ப அழகாய் இருகிறாய் புது டிரஸ் சூப்பர்... 
காதலி:  நன்றி :எங்கள் கல்யாண நாள்  எனது கணவர் வாங்கி தந்தது... 

காதலன்: இருபது வருடம் ஆகியும் இன்னும் நீ மாறவேயில்லை... 
காதலி ஆமா அதே வீடு தான்,அவருக்கு சம்பளம் குறைவு

டாக்டர் : உங்களுக்கு பத்து மணிக்கு ஆபரேஷன்...கடைசி 
ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.... 
நோயாளி: இதுவே உங்களுக்கு கடைசி ஆப்ரேஷனாய் இருக்கட்டும்..  

தலைவருக்கு இருந்தாலும் இந்த நக்கல் கூடாது.... 
எதுக்கு சொல்லுறே? எதிர் கட்சி தலைவருக்கு 
படை,சொறி வந்தததை சுட்டிக்காட்டி இந்த படை 
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று சொல்லுகிறார்

நானும் என் மனைவியும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள் 
எனக்கு தெரியும் ? எப்படி... யாரு சொன்னா ?
அடிக்கடி உங்கள் மனைவி 
காற்றுவாங்க போனேன் வரும் வழியில் ஒரு கழுதையை வாங்கிவந்தேன் என்று பாடுவதை கேட்டது உண்டு.... 

டாகடர் : உங்களுக்கு என்ன வியாதி ? 
வந்தவர் : நான் நோயாளி இல்லே நன்கொடை வாங்க வந்தவன்... 
டாகடர் : அப்படியா அப்ப சின்ன அபரேஷன் பண்ணிவிட்டால் 
எல்லாம் சரியாகிவிடும்...  

"விமானம், ராக்கெட்டைப் பார்த்து: நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது." 
"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."


மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
நான்: எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
மனைவி: இன்னுமொரு டாக்டரை பார்க்க..

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ.. 
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு.. 


கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! 
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. 
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்

After a breakup between two lovers a friend asks the girl "you left him or he left you?" She smiled and said 
"Love left us"

7/16/12

டாக்டருக்கும், ஆக்டருக்கும் என்ன சம்பந்தம்..ஜோக்ஸ்!!

"இந்த வீட்டுல இருக்கற எல்லோருக்கும் பதினெட்டு வயசுக்கு மேல ஆகுது தலைவரே...."
"அப்ப இதை "ஓட்டு வீடு"ன்னு சொல்லு..."

"டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...."
"ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா", "ஃபுல்லா"ன்னுதான் முதல்ல கேக்கணும்!"

ஒரு மேதாவி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு மற்றுமொரு மேதாவி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

"கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

"என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..."
"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?"
"ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"

"கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு."
"ஏன்?"
"விளம்பரத்துக்கு கீழே அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு."

"தேவைப்பட்டா நீங்க கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லணும்..."
"தேவைப்படலைன்னா?"
"ஸ்டேஷனுக்கு வந்து மாமூல் தரணும்!"


"டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"

"பையன் ராஜா மாதிரி இருப்பான்னு தரகர் சொன்னது சரிதான்...."
"ஏன்... என்னாச்சு?"
"பொண்ணைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடிட்டான்!"

"எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி..."
"எப்படி...?"
"அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!"

"கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?"
"தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்;
மொத்தமா கொடுத்தா டிரைவர்!"


"தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
"அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?"
"பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"

7/14/12

கழுதைப்படை..!!

பரீட்சை பேப்பர்லே சரஸ்வதி துணைன்னு எழுதாம,
லட்சுமி துணை-ன்னு எழுதியிருக்கியே?
எங்க டீச்சர் பேரு லட்சுமியாச்சே

எதுக்கு எங்கைளை உங்க வீட்டு மாடிக்கு கூப்பிடுறீங்க?
நீங்கதானை சார் சொன்னீங்க! வீட்டு மேலதான் லோன்
கொடுப்பீங்கன்னு..!
டாக்டர்! தினமும் ஏதாவது விளையாடினா உடல் எடை
குறையும்னு சொன்னீங்க..!
மூணு வருஷமா விளையாடி வர்றேன். எடை கூடுதே
தவிற குறைய மாட்டேங்குது…!
என்ன விளையாட்டு விளையாடினே?
வீடியோ கேம்..!


டேய்…ராமு ! இங்கிலீஷ் தெரியலைன்னா உங்க அப்பாகிட்டே
கேட்க வேண்டியதுதானே…?
அவருக்கு தெரியலை சார்..!
நீ என்னடா சொல்றே?
ஆமாம்… அவரு உங்க ஸ்டூடண்டாம்

மன்னா, சிக்கன நடவடிக்கை தேவைதான். அதற்காக,
குதிரை விலை அதிகமென்று கழுதை வாங்கி
கழுதைப்படை அமைத்திருப்பது நல்லாவா இருக்கு..!
தளபதியாரே, கிளப்புங்கள் குதிரையை…மன்னரை
மீட்டு வர வேண்டும!
ஏன்…மன்னரை எதிரிப்படை சுற்றி வளைத்து விட்டதா?
இல்லை…டாஸ்மாக் கடையில மப்பு அதிகமாகி
மல்லாந்து விட்டாராம்!
அசைவம் சாப்பிடாமல் நாக்கு செத்து விட்டது
அமைச்சரே..!
தங்களின் ஏக்கம் புரிகிறது மன்னா….பாழாய்போன
செல்போன் வந்தபிறகு சிற்றரசர்கள் எல்லோரும்
எஸ்.எம்.எஸ்.தானே அனுப்புகிறார்கள்.
எவன் புறாவைத் தூது விடுகிறான்?

மன்னர்,வில்,வாள், கேடயத்தை எடைக்குப் போட்டு
பேரீச்சம்பழம் வாங்கித் தின்று விட்டார்..!
நேற்று 'சிங்கம்போல ஸ்ட்ரெங்த்..எனக்கு'ன்னு
அவர் சொல்லும்போதே நான் டவுட் ஆனேன்யா..!
இந்த அளவுக்கா பொழுது போகாம இருப்பாங்க..?
ஏன் என்னாச்சு?
உங்க நியூஸ் பேப்பரை முழுசா படிச்சும் பொழுது போகலை….வேற ஏதாச்சும் நியூஸ் இருந்தா சொல்லுங்கன்னு போன்போட்டு கேட்கறாங்க…!

நேத்து என் கனவில நமீதா பட்டுப் புடவை கட்டிக்கிட்டு, 
நெற்றி நிறைய குங்குமத்தோடு வந்தாங்க…!
அப்ப பகல் கனவுன்னு சொல்லு…!


7/6/12

நான் களவுத்துறை அவன் உளவுத்துறை!'

கபாலி உன் பையனை துப்பறியும் இலாகாவுல பெரிய
ஆபீசரா ஆக்கிட்டீயாமே?"
"ஆமாங்க ஏட்டையா… நான் களவுத்துறை அவன் உளவுத்துறை!'

பாகவதர் பாடிட்டிருக் கிறப்போ திடீர்னு பவர் கட்டாயிடுச்சு..
உடனே ஆடியன்ஸுங்க கத்த ஆரம்பிச் சிட்டாங்க!"
"அப்படியா!?"
"ஆமாம்! சந்தோஷத்துல!"

டாக்டர்: என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க
சர்வர்: சார்…என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா…

டைப்பிஸ்ட்: ஏன் சார்…இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?
மானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..?
டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே…
ஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?
மற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்…
ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே…ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?
மற்றவன்: இல்லடா…வேலூர் ஜெயிலில் இருக்கிறார்..!

பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை…கிளம்புங்க..!
பஜ்ஜி பிடிச்சிருக்கு..!
சாபிட்டுட்டுக் கிளம்பறோம்..!
உங்க மகள் நளீனாஸ்ரீக்கு கல்யாணம்னு கிசுகிசு வந்திருக்குதே மேடம்..!
எனக்கே இன்னும் கல்யாணம் ஆகலை….அதுக்குள்ளே அவளுக்கு என்ன அவசரம்..!

எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க டாக்டர்..!
எல்லோரும் இதையே சொன்னா நான் யாருக்குத்தான் ஆபரேஷன் பண்ணறது..!

எல்லாம் படித்ததில் பிடித்தது..

6/27/12

கொலவெறி கல கல ஜோக்ஸ்-1

கோபாலு : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபாலு : நான் home work செய்யலை சார் அதான் கேட்டேன்
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் அப்படி என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்
டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
எங்கப்பா கடிச்சுச்சு?
சைதாப்பேட்டையிலே டாக்டர்!
இதுதான் மனிதாபிமானம்

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு
தலைவர் ஜெயிச்ச உடனே தொகுதியை சுத்தி சுத்தி வர்றாரே,
நன்றி சொல்லவா..?
ஏதாவது பொறம்போக்கு நிலம் இருக்குமா, வளைச்சுப் போடலாமான்னு
பார்க்கிறார்…!

தலைவருக்கு துப்பறியும் திறன் அதிகம்னு எப்படி சொல்றே..?
-
வெறும் தொப்புள் படத்தைக் காட்டினாலே, எது அனுஷ்கா தொப்புள்,
எது தமன்னா தொப்புள்னு கரெக்டா சொல்லிடுவாரு

ஏட்டய்யா, என்னை அடிக்காதீங்க…உண்மையைச்
சொல்லிடறேன்…திருடுனது நான்நான்..!
உண்மையை ஒத்துக்கவா அடிச்சேன்…மாமூல் ஒழுங்கா
குடுத்துடுனு சொல்லித்தானே அடிச்சேன்…!

லாஸ்ட் சம்மர்ல வெயில் தாங்க முடியாம சில எறும்புங்க ஆத்துல போயி நீந்திக்கிட்டு இருந்துச்சி.. அப்போ அங்கே வந்த ஒரு யானை தொபுக்கடீர்னு ஆத்துல குதிச்சிடுச்சி
திடீர்னு யானை குதிச்சதுனாலே எறும்பல்லாம் திக்காலுக்கு ஒண்ணா கரையில போய் விழுந்துச்சி.... ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல போய் உட்காந்துடுச்சு!!
அத பாத்து கரையில இருந்த மத்த எறும்பெல்லாம் கோரஸா கத்திச்சி...இப்படி,
. "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."
சுகர் இல்லாத (TEA) டீயும் .... பிகர் இல்லாத வாழ்க்கையும் கசப்புத்தான் ..
ஆனால்....!!
உடம்புக்கு நல்லது ....அவ்வ்வ்வ்வ்
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
அதுவே
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடந்தா ..? பங்ஷன்.!.

6/7/12

ஐய்யய்யோ என் இடுப்ப எவனோ கிள்ளிட்டான்!

# மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி ஒருத்தர சாவடிச்சிடுச்சி.
பக்கத்து கூண்டிலிருந்த குரங்கு ஏன் அவர அநியாயமா சாவடிச்சே?
அதுக்கு புலி சொல்லிச்சி: அந்த லூசு 3 மணி நேரமா என்ன உத்து பார்த்துட்டு சொல்றான்!!
இவ்வளவு பெரிய பூனையா?
# சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
சுவாமி: குவாட்டாரானந்தா
# ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க "அடுத்து உனக்குதான்" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.
# கணவன் : நான் நெனைக்கிறேன் நம்ம பொண்ணு காதல்ல விழுந்துட்டான்னு.
மனைவி : எத வெச்சு சொல்லறீங்க ?
கணவன் : இப்ப எல்லாம் அவ (pocket money) கேக்குறதே இல்ல!!!.
#அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

#அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.

#எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க.
ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காரருங்க.

# நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

# நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே

அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.

# மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்
# புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்...ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே....சிரிங்க...நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க...
சுவாமி:பல்லானந்தா
# அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....
டிஸ்கி - இந்த தலைப்புக்கும் நம்ம குஷ்பூ அக்கா இடுப்பு மேட்டருக்கும் எந்த சம்பந்தமுமில்லை

6/2/12

மொக்கைகள் ஜாக்கிரதை

''எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கல...!''
''ஏன்...?''
''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?''
------------------------------------------------------------------------------------
ஒரு அம்மா மகனிடம் கேட்டாள், "திப்பு சுல்தான் யாரு தெரியுமா?"
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்
----------------------------------------------------------------------------------------
டே‌ய் ந‌ம்ம கூ‌ட்ட‌த்‌தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!
ஏன்டா? எ‌ன்னடா ப‌ண்ணா‌ன்?
ஒழு‌ங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
--------------------------------------------------------------------------------------
12 வருசமா ஒரு பொண்ண லவ் பண்றதா விட
ஒரு வருஷத்துல 12 பொண்ணுங்கள லவ் பண்றது
எவ்ளோவோ மேல்
ஒரு பெண்ணை நம்பி எமந்தோர் சங்கம்
-----------------------------------------------------------------------------------
USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்........
RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்.........
INDIA : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்..........
USA : சான்சே இல்ல,,,,, ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது.........
INDIA : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா...........
-----------------------------------------------------------------------------------------
பையன்: இன்னிக்கு ராத்திரி நம்ம ஊரவிட்டு ஓடிப்போயிடலாம்.!
பொண்ணு: எனக்கு தனிய வர்றதுக்கு பயமாயிருக்கு.
பையன்: அப்போ உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா..!
பொண்ணு: ....??
--------------------------------------------------------------------------------------------------

facebook வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் comment பண்ணாமல் இருக்க வேண்டாம்

Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்

காலை எழுந்தவுடன் Face Book -பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post

மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..
-----------------------------------------------------------------------------------------
want tell u a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS
படிக்குது .குரங்கு my blog படிக்குதுது எப்புடி!!!!
---------------------------------------------------------------------------------
காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
...
....
....
....
....
ஆப்பூ!!!


BEGGER : Sir, Please give Rs.10 for Tea
MAN: Tea!
Its Rs.5
BEGGER : One for My Lover
MAN : Wow! Begger too made a Lover?
BEGGER : No. Sir
'Lover made Me a Beggar'

5/31/12

இந்த பூனையும் பால் குடிக்குமா..!

# மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

# கணவன் - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
மனைவி- இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்................
# காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.
# என்னங்க..சீக்கிரம் டி.வி.ஆஃப் பண்ணுங்க..!
-
ஏன் பையன் படிக்கிறானா..?
-
இல்லைங்க..! பக்கத்து வீட்டிலே ஏதோ சண்டை…ஒண்ணுமே
கேட்க மாட்டேங்குது..!
# நேத்து எங்க வீட்டுக்குத் திருட வந்த திருடன் என்னை
சேர்ல வச்சு கட்டிட்டான்..!
உன் புருசன் என்ன பண்ணினாரு?
சந்தோஷத்திலே அவனுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டுக்
கொடுத்தாரு..!
# உங்ககிட்டேதான் டூ வீலர் எதுவுமே இல்லை. அப்புறம்
எதுக்கு ஹெல்மெட் வாங்கிட்டுப் போறீங்க?
என் மனைவி கொஞ்சம் முன் கோபக்காரி, அதான்
# உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!

5/30/12

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!


என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.

சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.

எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான்.

உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!


அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..? கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க? அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க

என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்..

அவளை முழுவதும் மறக்க முடியவில்லை.., காரணம் வேற figure இன்னும் செட் ஆகல மச்சி….….

என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி
கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு,
கண்டது கனவு மட்டுமா?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு
கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?

பெண் வீட்டார்: மாப்ள என்ன பண்றார்..?
ப்ரோக்கர் : அவர் நின்றால் ரயில் ஓடும், ரயில் நின்றால் அவர் ஓடுவார்..
பெண் வீட்டார்: ஐயோ அவ்வளவு பிசியா..?
ப்ரோக்கர் : ம்ம் ஸ்டேஷன்ல சுண்டல் விக்கிறார்!!!

குஸ்கா: என்ன இவ்வளவு சோகமா இருக்கிங்க?
பிஸ்ஸா: என்னோட மனைவி கூட சண்டை, ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..
குஸ்கா: நல்லதுதானே!!
பிஸ்ஸா: அந்த ஒரு மாசம் இன்னியோட முடியுது அதுதான் கவலையா இருக்கு..


எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!
"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

"பிட் அடித்து வாழ்வாரே வாழ்வார் பிட் அடிக்காதோர்-
அரியஸ் வைத்தே சாவார்" (தெருக்குறல்)


சிவப்பு மனிதனுக்கும் நிழ்ல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை
(நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)

5/16/12

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..



கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்."
"நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"
___________________________________________________________
அந்தத் தம்பதிக்கு பல வருஷங்களாக குழந்தைகள் இல்லை. மனைவி ஒரு லேடி டாக்டரையும் கணவன் ஒரு டாக்டரையும் பார்க்கப் போனார்கள்.
வீடு திரும்பிய மனைவி உற்சாகமாக இருந்தாள்.
"என்னங்க ஒரு குட் நியூஸ்."
"என்ன அது?"
"நான் மாசமா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?"
"பேட் நியூஸ்"
"அதான் என்கிட்டே குழந்தை பிறக்கப் போகுதுன்னே சொல்லிட்டாங்களே..இன்னும் என்ன பேட் நியூஸ்?"
"ஒரு பெண்ணை தாயாக்கற தகுதி எனக்கில்லைன்னு கன்பார்மா சொன்னாரு"
___________________________________________________________
"என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா"
 "எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு"
 "இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?"
"அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்"
"நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்"
----------------------------------------------------------------------------------------
"என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?"
"ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்"
___________________________________________________________________
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்ன்னு பழமொழி தெரியுமா?"
"தெரியுமே, அதுக்கென்ன இப்போ?"
"கல்யாணம் பண்றதும், வீட்டைக் கட்டறதும் பார்த்துகிட்டு இருக்கத்தானா?"
________________________________________________________________________
"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்களே…"
"ஆமாம்"
"ஆடு மாடெல்லாம் வந்து மேய்ஞ்சிடாதா?"

12/28/11

காதல் எங்கே பிறந்தது தெரியுமா? ஜோக்ஸ்!

மனைவி : ஏங்க நம்ம பையன் பீடி குடிக்கிறானாமே! கேட்டீங்களா?
கணவன் : நான் கேட்டால் தரமாட்டான். நீ கேட்டு ஒண்ணு வாங்கிக் கொடேன்!!

மனைவி : லீவு எடுத்துட்டு நல்லா தூங்கறீங்களே இந்தப் பழக்கம் தானே நீங்க வேலைப் பார்க்கிற இடத்திலும் வரும்
கணவன் : போடீ கழுதை, இந்தப் பழக்கம் வந்ததே அங்கிருந்து தானே

நீதிபதி : ஏற்கனவே கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சு இரண்டாவது கல்யாணம் பண்ணினே.?
குற்றவாளி : கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாமுன்னு சொல்வாங்க நான் ஒரு பொய் தானே சொன்னேன்.

டீச்சர்: என்ன ஒற்றுமை இவர்களுக்குள் ஜீசஸ், காந்தி, புத்தர்??
மாணவர்கள்: இவர்கள் எல்லோரும் பிறந்தது விடுமுறை தினத்தில்

அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!

தாஜ்மஹால் பார்வை.
காவலாளி:தயவு செய்து அங்க உக்காராதீங்க, அது ஷாஜகானின் கதிரை.
சுற்றிப்பார்க்க வந்தவர்: கவலைப்படாதீங்க, அவரு வந்ததும் நான் எழுந்துடுவேன்.

பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls...

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

12/21/11

வாங்க பழகலாம்- ஜோக்ஸ்..!

‘‘உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’

‘‘அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே..!’’

காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’

பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே?"
"வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும், பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்."

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

"ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு?"
"ஐயோ, இல்லக்கா! நான் இல்லே!"
"யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும் போட முடியாதுடி!"

திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"
"அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு போயிட்டான்..."

ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
மாணவன்: கரையாது சார்.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!

"அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி"
"எப்படி?"
"நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும் ஒரே நாளில் நடத்திட்டாளே!"

வாங்க பழகலாம்
என்கிட்ட இரண்டு FULL இருக்கு
ஒண்ண ஆங்க வை...
இன்னொண்ண இங்க வை....
நடுவுல இரண்டு கிளாஸ வை....
நல்லா பழகுங்க..
பிடிச்சா வயித்தோட வைச்சிக்கோங்க..
இல்லேன்னா
வாந்தி எடுத்திடுங்க...

ஒக்கேவா..!


funnyworld-star.blogspot thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக