பக்கங்கள்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

கண்ணா நீ

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...



டிக்கட்டே இல்லாமல் எங்கு வேண்டுமோ பயணம் செய்ய!
உடனே அனுகவும்!
ஆகா நல்ல செய்தியாவுல இருக்குன்னு வந்தீகளா வந்ததுதான் வந்திக வாங்க வாங்க
வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும்,
அச்சச்சோ பென்ச் போடலையே! சரி சரி கண்ணால படிச்சிவிட்டு கையால கருத்தையும் சொல்லிடுங்க!




திருடர்களுக்கு ”கொள்ளை"நோய்

வழக்கறிங்ஞர்களுக்கு ”வாத" நோய்

விவசாயிகளுக்கு ”மேக"ப் படை


பெண்களுக்கு ”பொன்"னுக்குவீங்கி

வழுக்கைத்தலையர்களுக்கு ”விக்"கல்

எறும்புகளுக்கு ”சக்கரை"நோய்


பால்காரர்களுக்கு "கோமா"

பாம்புகளுக்கு ”புற்று"நோய்

போர்வீரர்களுக்கு "படை"

சாராய வியாபாரிகளுக்கு கா"மாலை" நோய்

இப்படியெல்லாம் யோசிப்போர்களுக்கு. யோசிபீசியா அட்டாக்

கொஞ்சம் சில்லுன்னு ஏதாவது குடிக்கனும்போல் தோணுதா.
என்ன தேடுறீங்க! என்ன குடிக்கலாமுன்னா! இதோ இதபோல் செய்து குடிங்க.
சும்மா சூ சு

[3பேருக்கு]
 வாழைப்பழம் 1
 ஐஸ் கட்டி 1 கப்
 ஆரஞ்ச் குல்கோஸ் 5 ஸ்பூன்
  ஜீனி 3 ஸ்பூன்
பிரஷ் பால் 2 கிளாஸ்

மிக்சியில் வாழைப்பழத்தையும் ஐஸையும்போட்டு ஒரு சுற்று.பின்பு அதில் பால். குல்கோஸ் ஜீனி அனைத்தையும்போடு ஒரு சுற்று. அவ்வளவுதான்.அப்படியே சில்லுன்னு குளு குளுன்னு குடிக்கலாம்.
இருங்க அப்படியேன்னதும் மிக்ஸியோடு தூக்கி குடிக்காதீங்க .ஒரு கிளாஸில் ஊற்றி குடிங்க  ஹ்கி ஹி ஹி..


தி.மு) திருமணத்திற்கு முன்

[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

------------------------------------------------------------------
 ....................................
--------------------------------------------------------------

என்ன தேடுறீங்க விசயம் இருக்குது கீழேபாருங்க
[இது நம்ம சேத்துகிட்டது]


இப்போது
(தி.பி) திருமணத்திற்குப் பின்

அப்படியே கீழிருந்து மேலே படியுங்கள்

இது மெயிலில் வந்ததுங்கோ நான் படித்ததும் சரி நாம் பெற்ற இ------து இவ்வையகமும் பெறட்டுமென்றுதான்.
இதில் பாருங்கப்பா பொண்ணுங்க ரொம்ப நல்லவங்கன்னும். எப்போதும் பாவப்பட்ட ஏமாறுகிற  ஜீவன்களென்றும் சொல்லாமா சொல்லிட்டாங்க.
இதிலிருந்து என்ன புரியுது..
ஆண்கள் எப்போதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்  [நீங்க நெனக்கிறதுதான் கேட்குதே] அதேதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக