பக்கங்கள்

செவ்வாய், 18 டிசம்பர், 2012


அரசியலுக்கும் இந்தப் புதிருக்கும் சம்பந்தமில்லை

கணக்கு வழக்கில்லாம ஏகப்பட்ட தொழில் செய்து வரும் ஒரு முதலாளிக்கு  திடீர் என்று பெருத்த சந்தேகம் வந்தது. நாம் செய்து வரும் தொழிலில் எது அதிகம் கல்லா கட்டுது அப்படின்னு. கணக்குப் புலின்னு நினைச்சு ஒருத்தர கல்லாவில உட்கார வைச்சா அவரு வாயே திறக்க மாட்டேங்கறாரு. ஆனா அவரு சில Hints மட்டும் கொடுத்தார்.


1) ஆட்டுக்கறி விற்பவர்
2) செல்போன் ரீசார்ஜ் செய்பவர்
3) விளையாட்டு சாமான் விற்பவர்

இந்த மூன்று பேரில் ஒருவருக்கு  தான் அதிகம் வருமானம். 
யார் அதிகம் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு கண்டிசன் 
மூவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேசுவார். 
மற்ற இரண்டு பேரும் பொய் பேசுபவர்கள்.



முதலாளி மூவரிடமும் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள்

ஆட்டுக்கறி விற்பவர்                             -        "நான் இல்லை."

செல்போன் ரீசார்ஜ் செய்பவர்             -        "நான் இல்லை"

விளையாட்டு சாமான் விற்பவர்        -        "செல்போன்  ரீசார்ஜ் செய்பவர்
                                                                                     என்று போட்டுக் கொடுத்தார்"








முதலாளிக்கு குழப்பம்.
இதில் யார் உண்மை பேசுகிறார்கள், 
யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக