பக்கங்கள்

புதன், 5 டிசம்பர், 2012

சும்மா சிரிச்சு பாரு


சும்மா சிரிச்சு பாரு



ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க


ஒருவன் :-என்னைப் பார்த்தால் வாலாட்டும்.



சுறா :- டேய் மச்சி ,நாளைக்கு சினிமாக்கு போறேன்,
வரியாடா

எறா :- முடிஞ்சா வறேன் மச்சி

சுறா :- படம் முடிஞ்சி ஏண்டா வர ! படம் ஆரம்பிக்கும்
பொழுதே வா !



டீச்சர் :- படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி
நேரம் தூங்கினால் போதும்.

மாணவன் :- அது எப்பிடி டீச்சர் முடியும் , ஒரு நாளைக்கு
ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது !!!



அப்பா :- புள்ளையாடா நீ !எல்லா பாடத்திலேயும் ஃபெயில்,
இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத !

மகன் :- சரி மச்சி !,ஒவரா சீன் போடாம சைன் போடு



மாணவன் :- சார்... என்ன இது ?

ஆசிரியர் :- கேள்வித்தாள் !

மாணவன் :- சார் ..இது என்ன ?

ஆசிரியர் :- விடைத்தாள் !!

மாணவன் :- கேள்வித்தாளில் கேள்வி இருக்கு ,விடைத்தாளில்
விடை எங்கே சார் ,என்ன கொடுமை சார் இது....

ஆசிரியர் :- ??!!??!!#@$%$#@


பேங்க் மேனேஜர் :- எங்க பேங்கில இன்ட்ரெஸ்ட் இல்லாமல்
கடன் தருவோம்.

கிராமத்தான் :- கொடுக்கிறது தான் கொடுக்கிறீங்க ,அதை 
சந்தோசமா கொடுக்கலாமே ! இன்ட்ரெஸ்ட் இல்லாம 
குடுக்கிரேன்னு சொல்றீங்களே !!



கிராமத்து அப்பா :- (பையனிடம்) எப்பிடியோ நாலு வருஷம்
காலேஜ் படிப்ப முடிச்சிட்ட ,அடுத்து என்ன பண்ண போற ?

பையன் :- அறியர்சுன்னு மேல் படிப்பு ஒன்னு இருக்குப்பா !
அதை படிக்கணும் பா  


.


சரி சிரிச்சீங்களா சந்தோசம்

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் 



ரோட்டில் ஒரு பையனும் பொண்ணும் நடந்து போறாங்க. 


பையனோட மாமியார் பொண்ணோட  மாமியாருக்கு அம்மா. 


அப்படின்னா ரெண்டு பேருக்கும் என்ன உறவு?




டிஸ்கி :-


இன்ட்லியில் வாக்களிப்பது எப்பிடி ?


நமது தளத்தில் வரும் இன்ட்லி ஒட்டு பட்டையில் இன்ட்லி 
என்ற எழுத்தின் மீது கிளிக் செய்யவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக