பக்கங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

கோகுலின் நகைச்சுவை


காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!
******
ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது…!
சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!
ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு…!
******
ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்’னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?
சோமு : வேறென்ன…! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!
******
சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?
ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா….
******
நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
******
ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?
சோமு : இல்லை கிடைக்கலையே!
ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!
******
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?
ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.
******
இன்றைய மெகா ஜோக்:
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
******

ப்ரியத்துடன்,
கோகுல்
Thanks:Piravakam@googlegroups.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக