பக்கங்கள்

திங்கள், 14 ஜனவரி, 2013

நான் செத்தபிறகு செருப்பால் அடி


நான் செத்தபிறகு செருப்பால் அடி

மரம் : கிஷோரி ஓவியம்
ஓவியம் : கிஷோரி சந்தர் 
என் பாட்டன் வைத்த
மரத்தில்
குருவிகளும் ,காக்கைகளும்,
வாழ்ந்தன
தாத்தாவின் ஆன்மாவும் 
குடியிருக்க கூடும்

எப்போதாவது கிராமம்
செல்கையில்
நானும் அந்த மரத்து நிழலில்
நின்று வருவேன்

நிழலின் அருமையும்
நிழல் தரும்
மரத்தின் அருமையும்
வெய்யிலில் தெரியும்

சென்ற ஆண்டு அந்த
மரத்தை ரியல் எஸ்டேட்
கயவர்கள் வெட்டி விட்டார்கள்

என் பாட்டன் சாகும் போது
நான் பிறந்திருக்கவில்லை
என் பாட்டனின் மரம்
சாகும் போது
நான் தடுக்கவில்லை

"உங்க அப்பன்,பாட்டன்
செத்தா வருந்தும் நீங்கள்
அவர்கள் நட்ட
மரத்தை இரக்கமில்லாமல்
கொன்று போடுவீர்கள்"

என்னை என்னால்
செருப்பால் அடிக்க
வெட்கமாக இருக்கிறது
தாத்தா நீயே
நான் செத்தபிறகு
செருப்பால் அடி

ஒரு மரத்தைக் கூட
காப்பாற்ற துப்பில்லை
எனக்கு







தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, June 3, 2012

மாதர்

தகப்பனிடம்
திட்டு வாங்கியவள்
காதலனிடம்
கற்பை தொலைத்தவள்
கணவனிடம்
கட்டிலை தொலைத்தவள்
பிள்ளைகளால்
துரத்தப் பட்டவள்
ஆடு ,மாடு போல
அலைக்கழிக்கப் பட்டவள்
தெரு நாயைப் போல்
நடத்தப் பட்டவள்
வாயிருக்கும் ஊமை !
அப்பாவி பெண் ,நான்
சோதரர்களே
"மாதர் தம்மை
இழிவு செய்தல் "மடமை"
என்று கூட தெரியாத
நீங்களா
மடமையை
கொளுத்தப் போகிறீர்கள் ??" 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, April 27, 2012

காசாக்குகிறான்


பிச்சைக்காரன்
கருணையை காசாக்குகிறான்

ஆன்மிகவாதி
கடவுளை காசாக்குகிறான்

நாத்திகவாதி
பகுத்தறிவை காசாக்குகிறான்

அரசியல்வாதி
எல்லாவற்றையும் காசாக்குகிறான் 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, April 13, 2012

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்
மனித மனமாழ் குப்பைத்தொட்டி 
இன்னொரு பக்கம் பார்த்தால் 
எனக்குள் இருக்கிறான் 
ஒரு வஞ்சகன் ,
ஒரு திருடன்,
ஒரு கொலைகாரன்,
ஒரு தீவிரவாதி,
ஒரு சூழ்ச்சியன் ,
ஒரு துரோகி,
அரை தூக்கத்தில் ஒரு காமவெறியன்..
வெளியில் பார்க்கும் 
உங்களுக்கு எப்பொழுதும் 
நான் நல்லவன்; மிக நல்லவன் 
இனியன்,கனியன்,அமுதன் 
பழக,பேச,உறவாட சிறந்தோன் 
எனவே 
மறக்காமல் எனக்கே ஓட்டுப்போடுங்கள் !
   

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, April 6, 2012

ஒரு கேள்வி ?


தோழர்களே ,
வளர்ந்த மரங்களை
வெட்டி விட்டு
கட்டிடங்கள் வளர்ப்பது தான்
வளர்ச்சியா ?

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, March 16, 2012

தேர்தல்



அண்ட புளுகு ஆகாச புளுகு
கண்ட மதிரும் நிலநடுக்க புளுகு
ஏற்றிக் கொண்டு வருகுது தேர்தல் !

கரும்புள்ளி கையில் வைத்து விட்டு
கரும்பாய் அறிக்கை உதிர்த்து விட்டு
ஏழைகள் வயிற்றில் அடிக்குது தேர்தல் !

சனநாயகம் தோற்று போயிற்று இங்கே
பணநாயகம் மற்றும் பதவியில் அமர
இலகுவாய் வழி செய்யுது தேர்தல் !

பிரியாணிக்கும் குவாட்டருகும் கூடும் கூட்டம்
வரிபணத்தை களவு செய்வதில் நாட்டம்
எலெக்ட்ரானிக் சாதனமாய் மாறியது தேர்தல் !

குடவோலை சோழன் கொடுத்தது தேர்தல்
குடங்குடமாய் இலவசம் கொடுக்குது தேர்தல்
மக்களின் கண்ணீரையும் ஓட்டாகுது தேர்தல் !

மக்களாட்சி என்றால் மக்களின் ஆட்சியாகும்
மக்களை ஏமாற்றி அமைக்கும் ஆட்சியாகுமா ?
இனிமேலாவது புரிந்து கொள்ளாதா இத்தேர்தல் ...





தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Saturday, March 10, 2012

அவர்களிடம் கேட்டோம்

அவர்களிடம் கேட்டோம்
சிறுபான்மையினர் என்றனர்
உரக்க கேட்டோம்
தாழ்த்தப்பட்டோர் என்றனர்
போராடி கேட்டோம்
துப்பாக்கியை நீட்டினர் !

நாங்கள் சமூகத்திலிருந்து
விடுதலை கேட்கவில்லை
எங்களுக்கு தேவை
சமூக விடுதலையே !

நாங்கள் நிலம் கேட்டு
போராடவில்லை
இருக்கும் நிலத்தை அபகரிக்காதீர்
என்றே போராடுகிறோம் !


தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, March 9, 2012

உடம்புக்கு சரியில்லை

காய்ச்சல் வந்தது
அரசு மருத்துவமனைக்குச் சென்றேன் ..
மருத்துவமனை நோயுற்று இருந்தது


தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

எங்கள் நிலம்

ஒரு காலத்தில் 
ஆங்கிலேயன் வந்தான் 
எங்கள் நிலத்தில் 
கருவேலம் நட்டான் ...
....................
நாங்கள் சீர்செய்தோம் 
பயிர் செய்தோம் 
................
இப்போது ,
அரசியல்வாதி வந்தான் 
எங்கள் நிலத்தையே 
எடுத்துக்கொண்டு போகிறான் !!!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Thursday, March 8, 2012

கண்ணீரின் நிறம் சிவப்பு

கண்ணீரின் நிறம் மட்டும்
சிவப்பாய் இருக்குமெனில்
என் தமிழினத்தின்
முகம் சிவப்பாய் தான்
இருந்திருக்கும் !!!!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Tuesday, March 6, 2012

காக்கா கவிதை


வடையை வைத்துக் கொண்டிருந்த
காக்கையிடம்
“வடை தாயேன் “ என்றது நரி
“ம்ம்ஹும்” காக்கா தரவில்லை
நரி யோசித்தது
“கரிய நிற காந்த காக்கா
அறிய வகை பறவை காக்கா
இலவசமாக உனக்கு கூடு
தினமும் இலவச சாப்பாடு
இலவச முட்டை காப்பகம்
இலவச பறவைகள் சரணாலயம்
எல்லாம் தருகிறேன் “
வாக்குறுதி கொடுத்தது நரி
உழைப்பை மறந்த காக்கை
இலவச ஆசை கொண்ட காக்கை
வடையை நரியிடம் கொடுத்தது!!
நரி வடையை தின்றுவிட்டு
வாலை ஆட்டியாட்டி நடந்தது
நரியை பற்றி நமக்கு தெரியாதா ???
வடை போச்சே .................... 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, March 4, 2012

உருப்படமாட்டீர்கள் !!

அரசியல்வாதியின் கையில்
அட்சயபாத்திரமும்
மக்கள் கையில்
பிச்சைப்பாத்திரமும்
கொடுக்கும் ,நீங்கள்
உருப்படமாட்டீர்கள் !!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Wednesday, February 29, 2012

மன்னராட்சி


நான் அரசியல்வாதி,
என் மகன் அரசியல்வாதி,
பேரன் அரசியல்வாதி ,
கொள்ளு பேரனுக்கு
அரசியல் எதிர்காலம் உண்டு ..
ஹா ...ஹா ...
இது நீங்கள் ஓட்டுபோட்டு
தேர்ந்தெடுக்கும் ,மன்னராட்சி ........

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Monday, February 20, 2012

மக்களாட்சி


மன்னராட்சியில்
   நாட்டுக்கு ஒரு ராஜா!
மக்களாட்சியில்
   வார்டுக்கு ஒரு ராஜா! 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Thursday, February 9, 2012

கலாச்சாரம்

பெண்களின் உடைக்குறைப்பில்
கலாசாரம் சீரழிகிறது என்றால்
தைக்கவேண்டும் ஒரு கருப்புத்துணி
ஆண்களின் கண்களை மூட !!!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, January 29, 2012

நெடுஞ்சாலை


பாட்டன் வாழ்ந்த வீட்டை
நெடுஞ்சாலை உண்டது ...
பொக்கலைன் இயந்திரங்கள்
ஆக்ரோஷமாய் சுவர்களை
இடித்த போது...
தந்தையின் கண்ணில் முதல் முறை
கண்ணீர் சுரந்தது ...
மரங்கள் சாய கூட்டை இழந்த
பறவையாய் என் தாய் ....
சிறு வயதில் சுவரில் நான் வரைந்த
ஓவியங்கள் மரணத்தில் துடித்தது
.........
வழுக்கிக் கொண்டு செல்லும்
வாகனங்களுக்கு தெரியப்போவதில்லை
இந்த உதிரங்களின் துயரம் ..
ஒரு இழப்பின் உயரம் ..........

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Tuesday, January 3, 2012

வேட்பாளன்


பிச்சைக்காரன் காசை
பிச்சையாக கேட்கிறான்
வேட்பாளன் காசைக்
கொடுத்து வாக்கை
பிச்சையாக கேட்கிறான்
காசு வாங்கிய இருவரும்
பிச்சையராகவே இருக்கின்றனர்

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Thursday, October 27, 2011

சிதறல்கள்

சாதியம் ஒரு முள் செடி...
வேலியாக பயன்படுத்துவதை நிறுத்தி !!
கட்டையாக எரியுங்கள்!!

.................................................................

கடற்கரையில்
கடல் தொடங்குகிறதா? முடிகிறதா?

.................................................................

கடவுளை கேட்கிறேன்..
நீ படைத்தது உண்மையானால்..
ஏன் படைத்தாய் ?

................................................................

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, April 24, 2011

ஊனமுற்றவர்

ஊனமுற்றவர்
கடவுளின் குழந்தைகள்!!, என்றால்
நீங்கள் சாத்தானின் குழந்தைகளா?

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, September 19, 2010

முரண்

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுமி

அன்பர்களே இது எனது ஐம்பதாவது பதிவு
இக்கவிதையை தினமும் உழைத்து உருகும் குழந்தை தொழிலாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

கற்பை போன்ற நட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக