பக்கங்கள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..!


ஹனிமூன் போகலாம் வாங்க!

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்கு... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"

கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்
ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார் 

ஹலோ நான் குமார் பேசுறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சேலத்துல் 3  குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரோடுல   6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரா இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.
ஏன் ஸ்கூட்டரை திருடினே...?" 
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு 
அவசரப்படுத்தினாரு எசமான்..!"

ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.
மனைவி: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.
டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்
மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?
டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.
என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவேன்.
வீட்டுலே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ் அரெஸ்ட் பண்ணும்?
நீ வேற... அவரோட வீட்டுலே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்!

வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனிமூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..

12/16/12

ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..!

உலகில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.. நிறங்கள் மாறுபட்டாலும் யாவரும் சமமே.


 பேஸ் வாஷ் பண்ணாம போனா கேர்ள் பிரண்ட் துரத்தி விட்ருவா அதான்..

எப்புடி தெண்னை மரம்.. 

பேமிலி டூர்.. வாங்களே சேர்ந்து போகலாம்.

ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..

இது எப்பூடி

முடிவையும் ஆரம்பத்திலேயே தீர்மானியுங்கள்.

இதுதான் பொறாமங்குறது..

ஹே ஹே

புறத்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டு விட முடியாது

சூப்பர்

12/14/12

ஜஸ்ட் சும்மா ஜாலி.!

ரோட்ல போகும் போது நேரா பார்த்து போகனும் புரிஞ்சுதா..

இப்படி கொஞ்சம் நில்லு நான் விளையாடிட்டி வரேன்..

தூக்கமா தூக்கமா வருது



ஐய்யயோ..

ஹிஹிஹி

செம ஜாலி...

ஹே ஹே ,,,


இது gangnam style தான்..


12/11/12

இப்பொழுது சந்தையில் ஆண்ட்ரியா போன்!

அப்பா, எனக்கு கப் ஐஸ் வாங்கி தாப்பா!
அதெல்லாம் விலை அதிகம்! சம்பளம் வரட்டும் வாங்கித்தரேன்!
அப்ப இடைக்கால நிவாரணமா ஒரு குச்சி ஐஸாவது வாங்கித்தாப்பா!

நடுக்கடல்ல ஒரு சின்ன தீவு.. அங்கே ஒரு ஆம்பளை, ரெண்டு லேடீஸ் மட்டும் இருக்காங்க.. இருந்தாலும் அவன் மனசுல ஒரு மகிழ்ச்சியே இல்லே! ஏன்?
அந்த ரெண்டு லேடீஸ்ல ஒருத்தி மனைவி, இன்னொருத்தி அம்மாவாயிருக்கும்!
நான் பிறந்த ஊர் "ரை" என் மனைவி ஊர் "ராந்தகம்"
கேள்விப்படாத ஊருங்களா இருக்கே?
டாக்டர் என்னை "மது" உபயோகப்படுத்த கூடாதுன்னு சொல்லியிருக்காரே!

போன வருஷ தீபாவளிக்கு உங்க கடையில வாங்கின ஸ்வீட் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க!
அது அப்படியேத்தான் இருக்குதுங்க! ஒரு ரெண்டு கிலோ கொடுக்கட்டுமா
வேளாவேளைக்கு சாப்பிடுங்க! வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிங்க! வீட்டை பத்திரமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு உங்க மனைவி எங்க போறாங்க! ஊருக்கா?
  இல்லே! ஜவுளி கடைக்கு

கண் முன்னால சின்ன சின்னதா பூச்சி பறந்தது.. கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போட்டுகிட்டேன்!
 இப்ப எப்படி இருக்குது!
பூச்சி பெருசு பெருசா இருக்குது!

ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?
திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!

என்ன மாடல் ஜாக்கெட் தைக்கனும்? ஜன்னல் வெச்சா? கதவு வெச்சா?
 என்னம்மோ "புல்லட் புருப்" ஜாக்கெட்னு சொல்றாங்களே அந்த மாடல்ல தைச்சுக்கொடுங்க!
இந்த ஊழலில் உங்கள் பங்கு என்ன?
இன்னும் பிரிக்கவில்லை யுவர் ஆனர்!

திறந்து வைக்க கூட்டிட்டு போனவங்களை தலைவர் கண்டபடியா திட்டிட்டு வர்றாரே ஏன்?
 பீர் பாட்டிலை கொடுத்து திறக்கச் சொல்லிட்டாங்களாம்!
நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் ஓவ்வொருவருக்கும்
ஆண்ட்ரியா போன் இலவசமாக வழங்கப்படும்!
 தலைவரே அது ஆண்ட்ராய்டு போன்!

12/3/12

இன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு

இண்டர்வியுவில்:
உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா?
இருக்கே! இதுவரை 27 இண்டர்வியுவிலே 346 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்!

நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!
டாக்டர் : காரணம்!
நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !
டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது.  நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவு ?"
"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன்.  சில சமயம் நான் ஜெயிக்கிறேன்.  சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க.  இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு"  
எங்க வீட்டுக்காரர் ஒருநாள் பீச்சுல காத்து வாங்க வந்தார். அங்கே என்னை பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார்!
   கவனிச்சேன்! அடிக்கடி "காத்து வாங்கப்போனேன்! ஒரு கழுதை வாங்கி வந்தேன்"ன்னு பாடறாரே!

"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

 "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...
ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.


படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?

11/10/12

மனித இனம் எப்படி தோன்றியது கலக்கல் ஆய்வு!



மிஸ்டர்.பீர்பால் செல்வன் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி பீர்பால் செல்வனுக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.பீர்பால் செல்வனை கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

பீர்பால் செல்வன் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..! 

வீடியோவை பாருங்கள் சிரித்து மகிழுங்கள்..

11/3/12

சொர்க்கத்திற்குள் வக்கீல்களை அனுமதிப்பதில்லை!

உலகில் பொய் பித்தலாட்டாம் போன்றவற்றாலும் தன் வாதத்திறமையாலும் பல குற்றவாளிகளை காப்பாற்றி, நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து கொண்டிருந்த ஒரு பிரபல வக்கீல் இறந்து பரலோகம் போனாராம்! 
பரலோகத்தில் சொர்க்கத்தை கண்ட வக்கீல் ஆசையோடு சொர்க்கம் பக்கம் நடந்து போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்" என்றார்.
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை!

"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"

"ஆஹ்... நான் நிறையப்பேருக்கு உதவி செய்திருக்கிறேன் தர்மம் வழங்கியிருக்கிறேன். இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்தேன்! 

நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன்.

"ஓ.. சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து வந்த தேவதை."இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய்!
கூட சேர்த்து 3 ரூபாயோடு 20 ரூபாயை பிடியுங்கள்.. 

ஜஸ்ட் YOU..GO TO THE HELL...!" 

10/24/12

அன்புள்ள அம்மாவுக்கு, நகைச்சுவை கதை!

ஒரு வீட்ல அம்மா அப்பா மகள் மூன்று பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்திருந்தது.. ஒரு நாள் அம்மா மகளின்  படுக்கை அறை சுத்தம் பண்ணப்போறப்போ அங்கே எல்லாமே நீட்டா இருக்கு, கட்டில் நடுவில ஒரு கடிதம், அதில "அம்மாவுக்கு"னு இருக்கு.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,"
அன்புள்ள அம்மாவுக்கு, 

இத எழுத மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஒரு பையனை லவ் பண்றேன்! அப்பாவும் நீயும் கண்டிப்பா எதிர்ப்பீங்கன்னு தெரியும் அதனால வேற வழியில்ல நானும் என் லவ்வரும் ஓடிப்போலாம்னு முடிவு எடுத்துட்டோம்.

கோவி கண்ணன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன் அழகா பச்சை குத்திக்குவான், சேறடிச்ச கலர் பேண்ட், ஃப்ரென்ச் தாடி இப்டி அவன் டேஸ்ட் வித்யாசமானது. அதில்லாம நான் இப்போ கர்ப்பமாயிருக்கேன்!.அவனுக்கு முதுமலை பக்கத்துல ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கு அதில என்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு நிறைய குழந்தை பெத்துக்க ஆசையாம்! எனக்கும் அதான் ஆசை!!.அவன் லாரி நல்லா ஓட்டுவானாம், அதனால ஒரு க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.இப்போதைக்கு எங்கள காப்பாத்திக்க அது போதும், அதே நேரத்தில எயிட்சுக்கு சீக்கிரமாவே மருந்து கண்டு பிடிக்கணும்னு கடவுள வேண்டிக்கிங்க கோவி கண்ணனுக்கு எயிட்சுன்னு அவன் சந்தேகப்படுறான். 

கவலைப் படாதீங்கம்மா எனக்கு 15 வயசாகுது வாழ்க்கையை பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும் ஒரு நாள் உங்க பேரக் குழந்தைங்களோட கண்டிப்பா வர்றேன். 

உங்கள் மகள், 
பிரியா 




பின் குறிப்பு: மேல சொன்ன எல்லாமே பொய். நான் கதவுக்கு பின்னாடி இருக்கேன்.டேபிள்ல இருக்கிற என்னோட ரேங்க் ஷீட்ட விட வாழ்க்கைல மோசமான விஷயங்கள் இருக்குன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் இத எழுதினேன் உங்க கோபம் தீர்ந்ததும் என்னை கூப்பிடவும்."

10/22/12

நஸ்ருதீன் முல்லா நகைச்சுவை கதைகள்!

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ''அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது'' என்றார். ''உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?'' என்று கேட்டனர். முல்லா, ''நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை'' என்றாராம்.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ''உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார்.முல்லா, ''முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்'' என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ''கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா'' என்றார். உடனே கோபத்துடன், ''என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை'' என்றார் முல்லா.

ரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ''முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?'' என்றார். முல்லா, ராஜாவிடம் ''மிக ருசியாக இருந்தது'' என்றார். ராஜா, ''மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்'' என்றார்.

முல்லா கூடுதலாகவே, ''நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி'' என்றார். ராஜா முல்லாவிடம், ''ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.''உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை'' என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ''முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?'' என்று கேட்டார்.

முல்லா, ''முடியாது'' என்றார்.தெருக்காரர், ''ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?'' என்றார்.

முல்லா, ''கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது'' என்றார் முல்லா.

தெருக்காரர், ''கொடியில் மாவை உலரப் போட முடியுமா?'' என்றார்.

முல்லா, ''இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை'' என்றார்.

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

''முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார் பாதசாரி ஒருவர்.

''மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்'' என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ''அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?'' என்றார்.

முல்லா கோபப்பட்டு, ''எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?'' என்

படித்ததில் பிடித்தது!

10/17/12

ஜன்னலோர விமான சீட்டுக்கு அடம்பிடித்த பிரபல பதிவர்!

கண்ணன் சிங்கப்பூரில் வசிக்கும் பிரபல தமிழ் பதிவர்! ஒரு முறை இந்தியா வந்து மீள திரும்பும்போது சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார்.. மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.


கண்ணன் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்.!

பெண்மணி : (விமான பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.என்னென்னமோ உளர்றான்..
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
கண்ணன் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்!.

அங்கே நடந்த கலவரத்தைப்பார்த்து விமான துனைக்கேப்டனும் அங்கே வருகிறார்..
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார். அடம்பிடிக்காம அந்த அம்மாவுக்கு சீட்ட கொடுத்துட்டு உங்க சீட்ல உட்காருங்க!
கண்ணன் : அதெல்லாம் முடியாதுய்யா. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் நிறைய ஹிட்ஸ் வாங்க வேண்டும் நிறைய கமெண்ட் வாங்க வேண்டும்..! ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்!.

கேப்டன்( விஜயகாந்த் அல்ல விமானக்கேப்டன்) வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். கண்ணன் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன கண்ணன், தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சிங்கப்பூர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் சவுதி அரேபியா போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்.!!

10/16/12

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..!


கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே? 
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!
மனைவி : " என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்"
கணவன் : " அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே….
எத்தனை மாசம் ?"
மனைவி : " அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க"

மகேஷ் : " பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?"
தினேஷ் : "பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்"

பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.
பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?
பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...!
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.
கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்..

மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
தந்தை: ?!?!?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக