பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

வாய் விட்டு சிரியுங்க..


வாய் விட்டு சிரியுங்க..

1.யூனியன் தலைவர்- நம் அலுவலகத்தில் நம் மேல் திணிக்கப்படும் வாலண்டரி ரிடைர்மெண்டை எதிர்க்கும் விதத்தில் நான் முதலில் இந்த ஸ்கீமில் வெளியேறி நிர்வாகத்திற்கு ஒரு பாடம்
கற்பிக்க உள்ளேன்.

2.நான் உங்கிட்டே சொல்லாதேன்னு சொன்ன ரகசியத்தை நீ சுஜாதாகிட்ட சொல்லிட்டதா சொன்னாளே
நான் சுஜாதா கிட்டே சொன்னதை உங்கிட்டேசொல்லாதேன்னு சொன்னேனே சொல்லிட்டாளா
சரி...சரி..நான் அவ கிட்ட உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்..அதனால நான் அவ சொன்னதை உன் கிட்ட சொன்னதை அவகிட்ட சொல்லிடாதே
(படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)

3.அந்த தமிழ் படம் பார்க்கிறவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன புத்தகம் தர்றாங்களாமே
அது..அந்த படத்தில வர தமிழ் பாட்டுக்களுக்கு தமிழ் அர்த்தம் போட்டிருக்காங்களாம்.

4.குழந்தை-(சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு)அம்மா...அம்மா..சீக்கிரம் வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்திலே கால் இருக்கு..கால் இருக்க வேண்டிய இடத்திலே தலை இருக்கு.

5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான்.

6.நீ காதலிக்கிற பெண்ணைப்பற்றி என் அபிப்பிராயம் எதுக்கு தம்பி கேட்கிறே?
அந்த பெண்ணைப்பற்றி எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும்...உங்களுக்கு இருபது வருஷமா தெரியுமே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக