பக்கங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

கோகுலின் நகைச்சுவை


கோகுலின் நகைச்சுவை

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. ..
எப்படி ?
கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. .
******
எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ?
அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம்
******
ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா.
ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண்.
முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்
******
ஒரு வக்கீலிடம் நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா?-னு கேட்டான் ஒருத்தன்.
நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன?-னு கேட்டார் வக்கீல்.
******
நர்ஸ் : டாக்டர், எதுக்கும் இவருக்கு தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
டாக்டர் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?
******
எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க.
எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும்.
*******
பெண்ணின் அப்பா : பெண்ணைப் பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க.
மாப்பிள்ளை வீட்டார் : ஏன் அவசரப்படறீங்க?
பெண்ணின் அப்பா : தரகர், அடுத்த பார்ட்டியோட வெளியில காத்துக்கிட்டு இருக்கார்.
******
நடிகர் : என்னது, இந்த சீன்ல, நூறு அடி உயரத்திலிருந்து, நீச்சல் குளத்தில் குதிக்கணுமா? எனக்கு நீச்சல் தெரியாதே!
டைரக்டர் : பயப்படாதீங்க, அதுல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!
******
இதுதாங்க இன்னிக்கு மெகா ஜோக்:
நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.
டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..
நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?

ப்ரியத்துடன்,
கோகுல்
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:
Piravakam@googlegroups.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக